கோவையில் கொரோனாவால் சரிந்த விற்பனையை மீட்டெடுக்கும் முயற்சியில் சில்லி சிக்கன் 10 ரூபாய்க்கு விற்பனை!

கோவை: கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியதால் கோழி உற்பத்தியாளர்கள் சில்லி சிக்கனை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியதால் கோழி உற்பத்தியாளர்கள் சில்லி சிக்கனை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசைவ உணவு பிரியர்களின் பட்டியலில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது கோழி இறைச்சி என்று சொன்னால் அது மிகையல்ல. கோழிக்கறி மூலம் செய்யப்படும் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி உள்பட பல்வேறு உணவுகளுக்கு அசைவ பிரியர்களிடம் எப்போதும் தீராத மோகம் உண்டு.இதுதவிர ஆட்டு இறைச்சி மற்றும் மீன்களை விடவும் விலை குறைவு என்பதால் பல்வேறு தரப்பட்ட மக்களும் கோழிக்கறியை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் கோழிக்கறியையும் விட்டுவைக்கவில்லை. கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தியை கிளப்பியது.

இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் அதற்கு மேலும் வலுசேர்த்தது. இதனால் கோழிக்கறி வாங்குவதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி மளமளவென சரிந்து ரூ.60-ஐ அடைந்துள்ளது. இந்த விலைக்கு கூட கோழி இறைச்சியை வாங்குவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் இறைச்சி வியாபாரிகள் சிலர் கொரோனா வைரஸ் பீதியால் கோழிக்கறி நுகர்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியை வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தாததால் கோவை உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் போன்ற மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் உள்ள கடையில் 100 கிராம் சில்லி சிக்கன் 10 ரூபாய் என விற்கும் நிலைக்கு கோழி உற்பத்தியாளர்களே தள்ளப்பட்டு விட்டனர். கணிசமான விலையில் விற்கும் சில்லி சிக்கனை வாங்க மக்கள் முண்டியடித்தாலும் கோழிக்கறியை வாங்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கோழி இறைச்சியால் கொரோனா வைரஸ் நோய் பரவுவது இல்லை என தமிழக அரசின் சார்பில் விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில், வதந்திகளில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை என கோழி விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்தனர். கோழி இறைச்சியை போன்று கோழி முட்டை விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

மேலும், லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்து கடை வாடகை கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தலாம் என முடிவு செய்யும் போதெல்லாம் தவறான வதந்திகளால் தங்களது குடும்ப பொருளாதாரம் சீர்குலைவதாக தெரிவித்தனர். தமிழக அரசு கோழி விற்பனையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பிற்கும் கோழி இறைச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தி தவறான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழி இறைச்சி விற்பனை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...