டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் 'சர்வதேச சுகாதார அவசர நிலை' என்று அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வரும் 31.03.2020 வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் வரும் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளது
சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் 'சர்வதேச சுகாதார அவசர நிலை' என்று அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வரும் 31.03.2020 வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் வரும் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளது