திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையில் சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட் பகுதியை இடித்து புதிய கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று பொக்லைன் இயந்திரங்களுடன் கடைகளை இடிப்பதற்கு வந்த அதிகாரிகளை வியாபாரிகள் மார்க்கெட் பகுதிக்குள் நுழைய விடாமல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, போலீசார், அதிகாரிகள் மற்றும் வணிகர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக சந்தையை இடிக்கும் பணியை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையில் சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட் பகுதியை இடித்து புதிய கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று பொக்லைன் இயந்திரங்களுடன் கடைகளை இடிப்பதற்கு வந்த அதிகாரிகளை வியாபாரிகள் மார்க்கெட் பகுதிக்குள் நுழைய விடாமல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, போலீசார், அதிகாரிகள் மற்றும் வணிகர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக சந்தையை இடிக்கும் பணியை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.