கோவையில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் குறைந்த விலையில் முக கவசம் மற்றும் கிருமி நாசினி..! ஏராளமானோர் வாங்கி சென்றனர்

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகளிர் சுய உதவிக் குழு மூலம் முக கவசம், கிருமி நாசினிகள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகளிர் சுய உதவிக் குழு மூலம் முக கவசம், கிருமி நாசினிகள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானம், பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 31ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா செல்வது வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுதல் பொது போக்குவரத்துகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிவித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



இந்நிலையில், கோவையில் முக கவசம், கிருமி நாசினிகளை குறைந்த விலையில் அனைவரும் கிடைக்கப் பெற்றிட கோவை மகளிர் திட்ட அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட முக கவசம், கிருமி நாசினி ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகளிர் சுய உதவி குழுவினர் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம், கிருமி நாசினிகள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்பட்ட குறைந்த விலையிலான பொருட்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.



நாள் ஒன்றுக்கு ஆயிரம் முக கவசங்கள் வரை தயாரிக்கலாம் எனவும் டிஸ்போசபிள் முக கவசம் இருபது ரூபாய்க்கும் துவைத்து உபயோகிக்கக் கூடிய கவசம் 10 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்தனர். கிருமி நாசினி ஒரு லிட்டர் பாட்டில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகம் பேர் பணிபுரியும் இடங்களில் முக கவசம், கிருமி நாசினிகள் தேவைப்படுவோர் மகளிர் திட்டம் மூலமாகவும் அல்லது நேரடியாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.



மேலும், பாலி பாபிளின், பருத்தி கவசங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்து வருவதாகவும் தயாரிப்பிற்கான பொருட்கள் வழங்கப்பட்டால் முக கவசங்களை மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்துத் தருவதாக தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட முக கவசம், கிருமி நாசினிகளை ஏராளமானோர் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...