கோவை: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருவதால் அந்த நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கோவை வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருவதால் அந்த நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கோவை வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
1. வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை 31.03.2020 வரை தயவுசெய்து நீதிமன்றங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முடிந்த அளவு வழக்கறிஞர்களே நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. வழக்காடிகளின் வருகையின்மைக்கு குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
3. குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் adverse Orders கிடையாது.

4. 19.03.2020 முதல் 31.03.2020 வரை நமது CBA Canteen திறக்கப்படாது.
5. வழக்கறிஞர்கள் தங்களது Chamber ல் வழக்காடிகளை சந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
6. நீதிமன்றங்களில் நிபந்தனை கையொப்பம் போடும் வழக்காடிகள் காலை 9.45 மணிக்கே வந்து அந்தந்த நீதிமன்றத்தில் கையொப்பம் போட்டுவிட்டுச் சென்றுவிடலாம்.
7. 19.03.2020 முதல் 31.03.2020 வரை நீதிமன்ற பின்புற நுழைவாயில் (wicket Gate) காலை 9.30 to 11.00 and மாலை 5.00 to 6.30 வரை மட்டுமே திறந்திருக்கும். (இது நமது PDJ உத்தரவு)
8. 19.03.2020 முதல் Gate No.1, Gate No.4 and Wicket Gate ஆகிய நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பு, பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் மற்ற நுழைவாயில்கள் மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தயவு கூர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.
இவ்வாறு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
1. வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை 31.03.2020 வரை தயவுசெய்து நீதிமன்றங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முடிந்த அளவு வழக்கறிஞர்களே நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. வழக்காடிகளின் வருகையின்மைக்கு குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
3. குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் adverse Orders கிடையாது.

4. 19.03.2020 முதல் 31.03.2020 வரை நமது CBA Canteen திறக்கப்படாது.
5. வழக்கறிஞர்கள் தங்களது Chamber ல் வழக்காடிகளை சந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
6. நீதிமன்றங்களில் நிபந்தனை கையொப்பம் போடும் வழக்காடிகள் காலை 9.45 மணிக்கே வந்து அந்தந்த நீதிமன்றத்தில் கையொப்பம் போட்டுவிட்டுச் சென்றுவிடலாம்.
7. 19.03.2020 முதல் 31.03.2020 வரை நீதிமன்ற பின்புற நுழைவாயில் (wicket Gate) காலை 9.30 to 11.00 and மாலை 5.00 to 6.30 வரை மட்டுமே திறந்திருக்கும். (இது நமது PDJ உத்தரவு)
8. 19.03.2020 முதல் Gate No.1, Gate No.4 and Wicket Gate ஆகிய நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பு, பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் மற்ற நுழைவாயில்கள் மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தயவு கூர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.
இவ்வாறு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.