கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக கோவை ஆலாந்துறை அடுத்த மத்வராயபுரம் ஊராட்சியில் வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டியும் வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக கோவை ஆலாந்துறை அடுத்த மத்வராயபுரம் ஊராட்சியில் வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டியும் வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன. இதனால் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த மத்வராயபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையைக் கட்டியும் வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மத்வராயபுரம் ஊராட்சி சார்பில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது, வைரஸ் பரவாமல் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர். இது தவிர ஊராட்சி சார்பில் வீடுகள் முன்பு வேப்பிலை கட்டவும், மாட்டு சாணம் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுவராயபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றிவேல் கூறுகையில், தங்களுடைய ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் மக்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கு சென்று வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு எடுத்துரைப்பதாகவும் வீடுகளில் வேப்பிலை கட்டவும், மாட்டு சாணம் கொண்டு வாசல்களில் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்களுடைய ஊராட்சி கேரள வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறியவர், தங்களுடைய ஊராட்சியில் புதிதாக வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன. இதனால் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த மத்வராயபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையைக் கட்டியும் வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மத்வராயபுரம் ஊராட்சி சார்பில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது, வைரஸ் பரவாமல் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர். இது தவிர ஊராட்சி சார்பில் வீடுகள் முன்பு வேப்பிலை கட்டவும், மாட்டு சாணம் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுவராயபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றிவேல் கூறுகையில், தங்களுடைய ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் மக்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கு சென்று வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு எடுத்துரைப்பதாகவும் வீடுகளில் வேப்பிலை கட்டவும், மாட்டு சாணம் கொண்டு வாசல்களில் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்களுடைய ஊராட்சி கேரள வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறியவர், தங்களுடைய ஊராட்சியில் புதிதாக வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.