திருப்பூரில் சுய விளம்பரத்திற்காக தன்னைத் தானே வெட்டிக்கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது வழக்குபதிவு!

திருப்பூர்: திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் உயர் பதவியை அடைவதற்காக தன்னைத் தானே வெட்டிக்கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் உயர் பதவியை அடைவதற்காக தன்னைத் தானே வெட்டிக்கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருகிறார் பகவான் நந்து(50). இவர் நேற்று முன்தினம் இரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டதாக புகார் அளித்துவிட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகாரை அடுத்து போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் பகவான் நந்துவின் ஓட்டுநர் ருத்ரமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்ட போது பகவான் நந்து உத்தரவின் பெயரிலேயே பகவான் நந்துவை தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, இந்து மக்கள் கட்சியில் முக்கிய பதவி அடைவதற்காக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் ருத்ரமூர்த்தி மற்றும் பகவான் நந்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூரில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...