கோவை: ஆனைக்கட்டி பகுதியில் கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை 8 நாட்கள் காவல்துறையினர் விசாரணை நடத்த அனுமதி வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: ஆனைக்கட்டி பகுதியில் கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை 8 நாட்கள் காவல்துறையினர் விசாரணை நடத்த அனுமதி வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவலால் கியூ பிரிவு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பு பணி மற்றும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், எல்லைப் பகுதிகளில் இருந்து நகர்புறங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக வெளியான ரகசிய தகவலின் பேரில் தணிக்கைச்சாவடிகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கடந்த 11ம் தேதி கேரளாவில் இருந்து ஆனைக்கட்டி வழியாக கோவை வரும் அரசு பேருந்தை ஆனைக்கட்டி வனத்துறை தணிக்கைச்சாவடியில் சோதனை மேற்கொண்ட போது பேருந்துக்குள் இருந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை செய்தனர்.
இதனை தொடர்ந்து, மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் மார்ச் 26ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், விசாரணை நடத்த அனுமதி கோரி காவல்துறையினர் 10 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில் முதன்மை நீதிபதி சக்திவேல் 8 நாட்கள் அனுமதி அளித்து உள்ளார். மேலும், ஒருநாள் விட்டு ஒரு நாள் வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததுள்ளார்.