கறிக்கோழியால் கொரோனா வைரஸ் பரவவில்லை; 200 கிலோ சில்லி சிக்கனை பொதுமக்களுக்கு வழங்கி திருப்பூரில் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருப்பூர்: கறிக்கோழிகளால் கொரோனா வைரஸ் பரவுவதில்லை என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை பொதுமக்களை வழங்கி திருப்பூரில் உற்பத்தியாளர்கள்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருப்பூர்: கறிக்கோழிகளால் கொரோனா வைரஸ் பரவுவதில்லை என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை பொதுமக்களை வழங்கி திருப்பூரில் உற்பத்தியாளர்கள்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயம் மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழிலை தான் மக்கள்பெரும்பாலும் மேற்கொண்டுவருகின்றனர். இங்கு 1800 க்கும் அதிகமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.இந்த பண்ணைகள் மூலம் மாதம் தோறும் 45 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மதுரை ஆகிய நகரங்களுக்கும்,அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கறிக்கோழிகளின் மூலம் தான் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இதனால் கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது.இதனால் விலையும் குறைந்து விட்டது. விலை குறைந்தாலும் பொதுமக்கள் கறிக்கோழிகளை வாங்க தயக்கம் காட்டி வருவதால் இறைச்சி கடை வியாபாரிகள் தற்போது கவலையடைந்துள்ளனர்.

கறிக்கோழி தொழில் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் நிலையில் கொரோனா வைரஸின் பாதிப்பு பண்ணையாளர்களை நிலைகுலைய வைத்துவிட்டது

கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டத்திற்கும் வெளிமாநிலங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு செல்லப்படவில்ல.இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்து விட்டன.



இதனையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கறிக்கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது இல்லை என்பதை பொது மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக 200 கிலோ சில்லி சிக்கனை சமைத்து ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

மேலும் கறிக்கோழி,முட்டை சாப்பிடுவதால் வைரஸ் ஏற்படுவதில்லை என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...