கோவையில் தொழில் முதலீடு ஏற்படுத்தி தருவதாக 20 கோடி ரூபாய் மோசடி; முன்னாள் ராணுவ வீரர் சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் தொழிலில் முதலீடு என்ற பெயரில் 20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவையில் தொழிலில் முதலீடு என்ற பெயரில் 20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் 44 வயதான மகன் மகன் மணி. இவர் முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றிய இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொழில் முதலீடு மோசடியில் ஈபடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் பிரபல சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பெறலாம் என விளம்பரம் செய்துள்ளார். மேலும் குறைந்த பட்சமாக ஒரு லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் மாதம் 22 ஆயிரத்து 500 ரூபாய் தங்கள் வங்கு கணக்குகளில் பெறலாம் எனவும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்த தொழில் முதலீட்டு விளம்பரத்தை நம்பி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த நபர்கள் தங்களின் வசதிக்கேற்ப லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதலீட்டு பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்ட மணி இதுவரை யாருக்கும் மாதத் தொகையை கொடுக்காமலும், வாங்கிய தொகையை திருப்பி தராமலும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி லாரா விண்ணரசி மணி என்பவர் தன்னிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு பணத்தை திருப்பித் தர மறுப்பதாக கோவையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் முதலீட்டு பணத்தினை மோசடி செய்து தலைமறைவாக இருந்த மணியினை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடி தொகையானது 20 கோடியைத் தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...