கோவை: கோவையில் தொழிலில் முதலீடு என்ற பெயரில் 20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் தொழிலில் முதலீடு என்ற பெயரில் 20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் 44 வயதான மகன் மகன் மணி. இவர் முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றிய இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொழில் முதலீடு மோசடியில் ஈபடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் பிரபல சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பெறலாம் என விளம்பரம் செய்துள்ளார். மேலும் குறைந்த பட்சமாக ஒரு லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் மாதம் 22 ஆயிரத்து 500 ரூபாய் தங்கள் வங்கு கணக்குகளில் பெறலாம் எனவும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தியுள்ளார்.
இந்த தொழில் முதலீட்டு விளம்பரத்தை நம்பி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த நபர்கள் தங்களின் வசதிக்கேற்ப லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதலீட்டு பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்ட மணி இதுவரை யாருக்கும் மாதத் தொகையை கொடுக்காமலும், வாங்கிய தொகையை திருப்பி தராமலும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி லாரா விண்ணரசி மணி என்பவர் தன்னிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு பணத்தை திருப்பித் தர மறுப்பதாக கோவையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் முதலீட்டு பணத்தினை மோசடி செய்து தலைமறைவாக இருந்த மணியினை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடி தொகையானது 20 கோடியைத் தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் 44 வயதான மகன் மகன் மணி. இவர் முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றிய இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொழில் முதலீடு மோசடியில் ஈபடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் பிரபல சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பெறலாம் என விளம்பரம் செய்துள்ளார். மேலும் குறைந்த பட்சமாக ஒரு லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் மாதம் 22 ஆயிரத்து 500 ரூபாய் தங்கள் வங்கு கணக்குகளில் பெறலாம் எனவும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தியுள்ளார்.
இந்த தொழில் முதலீட்டு விளம்பரத்தை நம்பி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த நபர்கள் தங்களின் வசதிக்கேற்ப லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதலீட்டு பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்ட மணி இதுவரை யாருக்கும் மாதத் தொகையை கொடுக்காமலும், வாங்கிய தொகையை திருப்பி தராமலும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி லாரா விண்ணரசி மணி என்பவர் தன்னிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு பணத்தை திருப்பித் தர மறுப்பதாக கோவையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் முதலீட்டு பணத்தினை மோசடி செய்து தலைமறைவாக இருந்த மணியினை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடி தொகையானது 20 கோடியைத் தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.