கோவை: கோவை அடுத்த கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவரது காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை அடுத்த கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவரது காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத்(27). இவர் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கத்தின் போது காதலன் காதலியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் காதலன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுதொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிரசாத்தை கைது செய்த போலீசார், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத்(27). இவர் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கத்தின் போது காதலன் காதலியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் காதலன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுதொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிரசாத்தை கைது செய்த போலீசார், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.