கோவையில் காதலியுடன் தனிமையில் இருந்த அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய காதலன் கைது!

கோவை: கோவை அடுத்த கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவரது காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை அடுத்த கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவரது காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத்(27). இவர் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கத்தின் போது காதலன் காதலியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் காதலன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுதொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிரசாத்தை கைது செய்த போலீசார், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...