கோவை: வால்பாறையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னிமேடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள மழுக்கப்பாறை வனத்துறை சோதனைச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னிமேடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள மழுக்கப்பாறை வனத்துறை சோதனைச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பன்னிமேடு தேயிலை தோட்டத்தைச் சேர்ந்த கமலம் என்ற பெண் கொரானா அறிகுறியுடன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் வால்பாறை மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, பன்னிமேடு மற்றும் சுற்றுப் பகுதியிலுள்ள தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு முறைகள் பற்றி தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

மேலும், பன்னிமேடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள மழுக்கப்பாறை வனத்துறை சோதனைச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி கண்டிப்பாக அடிக்கும்படியும் உத்தரவிட்டார். காய்ச்சல், சளி உள்ளவர்கள் உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.