கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து கோவை வரும் ரயில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து கோவை வரும் ரயில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து இரயில்கள் மூலமாக கோவை வருபவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், கிருமி நாசினி மூலம் பயணிகளின் கைகளை சுத்தம் செய்வது, முக கவசங்கள் அணிவதன் அவசியம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கொரோனோ விழிப்புணர்வு நோட்டீஸ்களும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

ரயில் நிலையங்களில் கொரோனோ பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் 3 நாட்களுக்கு பயணிகளிடம் கொரோனோ பரிசோதனை நடத்தப்படுமென ரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை தெரிவித்தார். இந்த சோதனையில் கொரோனோ அறிகுறி தென்படும் பயணிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் இதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து இரயில்கள் மூலமாக கோவை வருபவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், கிருமி நாசினி மூலம் பயணிகளின் கைகளை சுத்தம் செய்வது, முக கவசங்கள் அணிவதன் அவசியம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கொரோனோ விழிப்புணர்வு நோட்டீஸ்களும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

ரயில் நிலையங்களில் கொரோனோ பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் 3 நாட்களுக்கு பயணிகளிடம் கொரோனோ பரிசோதனை நடத்தப்படுமென ரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை தெரிவித்தார். இந்த சோதனையில் கொரோனோ அறிகுறி தென்படும் பயணிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் இதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.