கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்குபதிவு

கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகர செயலாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகர செயலாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11ம் தேதி கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள மரச்செக்கு எண்ணெய்‌ கடையினுள்‌ வேலை செய்து கொண்டிருந்த ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகர செயலாளர் சூரியபிரகாஷை தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் இரும்பு ராடை கொண்டு பலமாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அவர் சுந்தராபுரம்‌ அபிராமி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, படுகாயமடைந்த ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகரச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த டி3 போத்தனூர்‌ காவல்‌ நிலைய போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு சந்தேகத்தின் பேரில் உக்கடம்‌, ஜி.எம்‌ நகரை சேர்ந்த அப்துல்‌ கபூர்‌ என்பவரின்‌ மகனான முகமது ஹனீபா (41) என்பவனை பிடித்து விசாரித்த போது, அவன் கொடுத்த ஒப்புதல்‌ வாக்குமூலத்தின்‌ பேரில்‌ கூட்டு சதி செய்து இந்த குற்றச்செயலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை 120(பி), 447,448,294(பி), 307, 506(2) பிரிவுக்கு மாற்றம்‌ செய்து தாக்குதலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமான TN 66 F 2210 என்ற எண்ணுள்ள Honda Unicorn வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போலீசார் அவனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில்‌, கோவை மாநகர பொது அமைதிக்கு பங்கம்‌ விளைவிக்கும்வகையில்‌ சதித்திட்டம்‌ தீட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால்‌ இவ்வழக்கின்‌ சட்டப்பிரிவுகளோடு சட்டவிரோத செயல்பாடுகள்‌ தடுப்புச்சட்டம்‌ 1967 (UAPA) பிரிவுகள்‌ 15, 16 & 18 சேர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...