கொரோனா அச்சுறுத்தல்: நீலகிரி முக்கிய சுற்றுலாத்தலங்கள் வரும் 31ம் தேதி வரை மூடல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.


நீலகிரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.



இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நீலகிரி எல்லையில் உள்ள கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இருவருக்கு கொரோனா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



உதகை தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா மையங்கள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னாசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாடு மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் நாளை காலைக்குள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமெனவும் 8 பேர் நீலகிரியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

மேலும், பொதுமக்களும் இதை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தவிர்க்க முடியாத பயணம் என்றால் செல்லலாம் என அறிவுறுத்தினார். இதுமட்டுமல்லாமல் அதிகமாக மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து பகுதிகளிலும் கூட்டத்தை தவிர்க்க வேண்டுமெனவும், சுபநிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல, எல்லையோர பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகவும் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் மூலம் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கொரேனா வைரஸ் அறிகுறிகள் இருப்பின் சந்தேகத்திற்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது எனவும் கூறினார்.

மேலும், நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, நகராட்சி மட்டுமல்லாமல் அனைத்து கிராமப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், இன்று மூடப்படும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...