கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டி கோவை மாவட்ட பாஜக சார்பில் கோனியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டி கோவை மாவட்ட பாஜக சார்பில் கோனியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு உள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவை மாவட்ட பாஜகவினர் சார்பில் நடத்தப்பட்ட இப்பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலில் கோவையையும் மக்களையும் கொரோனோ வைரசிடம் இருந்து காக்க வேண்டி வழிபாடு நடத்தியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு உள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவை மாவட்ட பாஜகவினர் சார்பில் நடத்தப்பட்ட இப்பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலில் கோவையையும் மக்களையும் கொரோனோ வைரசிடம் இருந்து காக்க வேண்டி வழிபாடு நடத்தியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.