கோவை: கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் வால்பாறை சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை: கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் வால்பாறை சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு உள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்கள், ஆறுகள், அழகிய புல்வெளிகள் மற்றும் சீதோஷ்ன தட்ப வெட்ப நிலையை ரசித்து அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் உள்ளன.
இந்நிலையில், உலகமெங்கும் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர். அரசு சார்பிலும் கல்வி நிலையங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வால்பாறை பகுதியிலுள்ள சுற்றுலாத் தலங்களான கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையார் அணை உட்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதன் காரணமாக, வால்பாறை பகுதியிலுள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள் தேநீர் கடைகள் கூட்டமின்றி வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு உள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்கள், ஆறுகள், அழகிய புல்வெளிகள் மற்றும் சீதோஷ்ன தட்ப வெட்ப நிலையை ரசித்து அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் உள்ளன.
இந்நிலையில், உலகமெங்கும் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர். அரசு சார்பிலும் கல்வி நிலையங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வால்பாறை பகுதியிலுள்ள சுற்றுலாத் தலங்களான கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையார் அணை உட்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதன் காரணமாக, வால்பாறை பகுதியிலுள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள் தேநீர் கடைகள் கூட்டமின்றி வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.