கொரோனா அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இருவரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இருவரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொடரும் அச்சத்தால் அனைத்து விமான நிலையங்களும் ஸ்கிரீனிங் முறையில் கொரோனோ வைரஸ் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின் போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரியவந்தது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். பின்னர் பள்ளிவாசல்களை சுற்றிப் பார்த்த அவர்கள் ஈரோடு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்த ஏழு பேரில் ஒருவரான நாற்பது வயது மதிக்கத்தக்கவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனிருந்தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப கோவை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்புப் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இரத்தம் மற்றும் சலி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அதேபோல, 27 வயது மதிப்புள்ள மற்றொரு நபரும் கொரோனோ அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்புகள் இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக எழுந்த பரபரப்பு தற்போது பாதிப்புகள் இல்லை என்ற தகவல் வெளியானதையடுத்து பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...