கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பொழுதுபோக்கு மற்றும் மக்கள் கூடும் இடங்களை தற்காலிகமாக மூட தமிழக அரசு அறிவித்தும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிளாக் தண்டர் திறந்திருப்பது மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பொழுதுபோக்கு மற்றும் மக்கள் கூடும் இடங்களை தற்காலிகமாக மூட தமிழக அரசு அறிவித்தும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிளாக் தண்டர் திறந்திருப்பது மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் முழுவதும் கொரோன வைரஸ் தாக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் கல்வி நிலையங்கள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், வாட்டர் தீம் பார்க் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்றாலும் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மால்கள், பள்ளிகள், திரையரங்குகள் போன்றவற்றை வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் பிளாக் தண்டர் திறந்திருப்பது மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக பயன்படுத்தும் இந்த விளையாட்டு தளம், இந்த சூழலில் திறந்திருப்பதற்கு மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், பிளாக் தண்டர் போன்ற கேளிக்கை இடங்களை மூட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.