ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்துக்கு காவலர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்துக்கு காவலர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட காவல்துறையில், பங்களாபுதூர் காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர் வரதராஜன் என்பவர் கடந்த 11.11.2019-ம் தேதி கோபி - சத்தி சாலையில் கரட்டடிபாளையம், ஆண்டவர் ஐ.டி.ஐ அருகில் நடைபெற்ற சாலை விபத்திலும், ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் செந்தில்குமார் என்பவர் கடந்த 20.11.2019-ம் தேதி ஈரோடு சத்தி ரோடு கனிராவுத்தர் குளம் அருகில் கண்ணன் பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்ற சாலை விபத்திலும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இன்று இரு காவலர்களின் குடும்பத்தினர்களுக்கும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மூலம் காவலர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரத்தியேகமாக தலா ரூபாய் 30 லட்சம் வழங்கப்பட்டது.

கோவை, காவல்துறை தலைவர் அவர்களின் அலுவலகத்தில் மறைந்த காவலர் வரதராஜன் அவர்களின் மனைவி பாரதி மற்றும் மறைந்த காவலர் செந்தில் குமார் அவர்களின் மனைவி கலா ஆகியோருக்கு கோவை மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா, இ.கா.ப., அவர்களால் தலா ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
அப்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மறைந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1,20,00.000,/- (ஒரு கோடியே இருபது லட்சம்) காவலர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் வழங்கப்படவேண்டிய அனைத்து பணப்பயன்களும் உடனடியாக நான்கு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட காவல்துறையில், பங்களாபுதூர் காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர் வரதராஜன் என்பவர் கடந்த 11.11.2019-ம் தேதி கோபி - சத்தி சாலையில் கரட்டடிபாளையம், ஆண்டவர் ஐ.டி.ஐ அருகில் நடைபெற்ற சாலை விபத்திலும், ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் செந்தில்குமார் என்பவர் கடந்த 20.11.2019-ம் தேதி ஈரோடு சத்தி ரோடு கனிராவுத்தர் குளம் அருகில் கண்ணன் பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்ற சாலை விபத்திலும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இன்று இரு காவலர்களின் குடும்பத்தினர்களுக்கும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மூலம் காவலர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரத்தியேகமாக தலா ரூபாய் 30 லட்சம் வழங்கப்பட்டது.

கோவை, காவல்துறை தலைவர் அவர்களின் அலுவலகத்தில் மறைந்த காவலர் வரதராஜன் அவர்களின் மனைவி பாரதி மற்றும் மறைந்த காவலர் செந்தில் குமார் அவர்களின் மனைவி கலா ஆகியோருக்கு கோவை மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா, இ.கா.ப., அவர்களால் தலா ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
அப்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மறைந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1,20,00.000,/- (ஒரு கோடியே இருபது லட்சம்) காவலர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் வழங்கப்படவேண்டிய அனைத்து பணப்பயன்களும் உடனடியாக நான்கு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.