திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர், திருப்பூர் அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 31வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி முன்பாக திரண்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, தற்போது கரூர் வைசியா வங்கியில் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்தகட்டமாக அனைத்து வங்கிகளிலும் உள்ள பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...