கோவையில் இரவு 10 மணிக்கு கடைகளை மூட உத்தரவு: வாழ்வாதாரம் பாதிப்பதாக மடியேந்தி மனு அளித்த சாலையோர நடைபாதை வியாபாரிகள்!

கோவை: கோவை மாநகர காவல்துறையின் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையோர கடைகள், தள்ளு வண்டி விற்பனை மூலம் ஈட்டி வந்த வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து சாலையோர நடைபாதை வியாபாரிகள் நலசங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மடியேந்தி மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையின் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையோர கடைகள், தள்ளு வண்டி விற்பனை மூலம் ஈட்டி வந்த வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து சாலையோர நடைபாதை வியாபாரிகள் நலசங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மடியேந்தி மனு அளித்தனர்.

கோவையில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபாதைகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தள்ளு வண்டிகளில் பழங்கள், இரவு நேர உணவு கடைகள் என ஏராளமானோர் தொழில் செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் இரு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும் பாதுகாப்பு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாநகர காவல்துறை குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து வியாபார நிறுவனங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டி வியாபாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.



இந்த உத்தரவின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையோர கடைகள், தள்ளு வண்டி விற்பனை மூலம் ஈட்டி வந்த வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து மடியேந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வியாபாரம் மேற்கொண்டு வரும் நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை நடைபாதை, தள்ளு வண்டி வியாபாரம் செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை தளர்த்தி வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...