கோவையில் அதிக விலைக்கு கிருமிநாசினி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: கிருமிநாசினி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிக விலைக்கு விற்பது, தரமில்லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.


கோவை: கிருமிநாசினி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிக விலைக்கு விற்பது, தரமில்லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது. மேலும், இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் நிலையில் ஆட்சியர் அலுவலகம் வரக்கூடிய பொது மக்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று நேரில் ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவை மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள், உள்நாட்டு பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் கேரளாவில் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், மாநில எல்லையில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்று மாலை முதல் அது செயல்பாட்டிற்கு வரும் என்றார். இரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாநில எல்லையில் உள்ள கல்லூரிகளில் படிப்பதால் கல்லூரி நிர்வாகங்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

கோவையில் உள்ள மால்கள் திரையரங்குகள் போன்றவற்றை மூடுவதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது எனவும் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர்களின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர்களுக்கான ரிசல்ட் இரு தினங்களில் வந்துவிடும் என தெரிவித்தார்.

மேலும், அங்கன்வாடிகளுக்கு இதுவரை விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், கிருமிநாசினி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிக விலைக்கு விற்பது, தரமில்லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கேரள மாணவர்கள் இங்கேயே தங்கிப் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தினமும் கேரளா சென்று வரும் மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் இன்று முதல் எல்லையோரத்தில் உள்ள கல்லூரிகளில் இருந்து தினமும் அறிக்கை பெறப்படும் என்றார். இது தொடர்பாக இன்று கல்லூரி நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தெரிவித்த ஆட்சியர் ராசாமணி, வரும் மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...