கோவை: வால்பாறையில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: வால்பாறையில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேசக்கரங்கள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவை முன்னிட்டு வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு பேரணியை துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஸ்டான்மோர் சந்திப்பு, காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் வழியாக அண்ணா திடலை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து அண்ணா திடலில் நடைபெற்ற விழாவிற்கு கோவை கோட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக வணிக மேலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நேசக்கரங்கள் இயக்குநர் பால்நிலா, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினர். முன்னதாக இயக்குநர் நேசக்கரங்கள் நேசமணி பால்நிலா வரவேற்றார்.

தொடர்ந்து சக்தி கலைக்குழுவினரின் கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், வேடராட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், வால்பாறை மகளிர் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேசக்கரங்கள் இயக்குநர்கள் நேசமணி பால் நிலா.முதல்வர் முரளீதரன், எல்.ஜ.சி கோவை கோட்ட வணிக மேலாளர் பன்னீர் செல்வம், துணை மேலாளர் பாரதி, மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ், வழக்கறிஞர் பால்பாண்டி, வீரமணி உட்பட ஏராளமான மகளிர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேசக்கரங்கள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவை முன்னிட்டு வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு பேரணியை துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஸ்டான்மோர் சந்திப்பு, காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் வழியாக அண்ணா திடலை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து அண்ணா திடலில் நடைபெற்ற விழாவிற்கு கோவை கோட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக வணிக மேலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நேசக்கரங்கள் இயக்குநர் பால்நிலா, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினர். முன்னதாக இயக்குநர் நேசக்கரங்கள் நேசமணி பால்நிலா வரவேற்றார்.

தொடர்ந்து சக்தி கலைக்குழுவினரின் கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், வேடராட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், வால்பாறை மகளிர் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேசக்கரங்கள் இயக்குநர்கள் நேசமணி பால் நிலா.முதல்வர் முரளீதரன், எல்.ஜ.சி கோவை கோட்ட வணிக மேலாளர் பன்னீர் செல்வம், துணை மேலாளர் பாரதி, மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ், வழக்கறிஞர் பால்பாண்டி, வீரமணி உட்பட ஏராளமான மகளிர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
