கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இன்றைய மாற்றம் நிறைந்த உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உடல் பருமன். ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கமே இந்த உடல் பருமனுக்கு காரணமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த உடல் பருமன் வராமல் இருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது வந்தால் எப்படி பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனையுடன் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உள்ள உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சைத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை முகாமில் தனிநபர்களின் உடல் வகைக் குறியீட்டின் அடிப்படையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, உடல் பருமன் நோயானது சர்க்கரை நோய், இருதய நோய் மற்றும் ஈரல் நோய் போன்ற நோய்களுக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது எனவும் முகாமில் கலந்து கொண்ட 60க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை முகாமை இத்துறையின் நிபுணர்களான டாக்டர் பாலமுருகன், டாக்டர் பரிமளா தேவி குமாரசாமி ஆகியோர் நடத்தினர்.
இன்றைய மாற்றம் நிறைந்த உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உடல் பருமன். ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கமே இந்த உடல் பருமனுக்கு காரணமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த உடல் பருமன் வராமல் இருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது வந்தால் எப்படி பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனையுடன் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உள்ள உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சைத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை முகாமில் தனிநபர்களின் உடல் வகைக் குறியீட்டின் அடிப்படையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, உடல் பருமன் நோயானது சர்க்கரை நோய், இருதய நோய் மற்றும் ஈரல் நோய் போன்ற நோய்களுக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது எனவும் முகாமில் கலந்து கொண்ட 60க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை முகாமை இத்துறையின் நிபுணர்களான டாக்டர் பாலமுருகன், டாக்டர் பரிமளா தேவி குமாரசாமி ஆகியோர் நடத்தினர்.