கோவை: கோவையில் வாட்ஸ் அப் குழுக்களில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரினை தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் வாட்ஸ் அப் குழுக்களில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரினை தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் திமுக மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் முருகன். இவர் கோவையில் உள்ள பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த கவுதம் என்பவர் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை யடுத்து காவல் நிலையத்தில் வைத்து திமுக பொதுக்குழு உறுப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் அறிந்த திமுகவினர் ராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

விசாரணையின் இறுதியில் திமுக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பற்றி அவதூறு தகவல்கள் அனுப்பப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் திமுக மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் முருகன். இவர் கோவையில் உள்ள பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த கவுதம் என்பவர் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை யடுத்து காவல் நிலையத்தில் வைத்து திமுக பொதுக்குழு உறுப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் அறிந்த திமுகவினர் ராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

விசாரணையின் இறுதியில் திமுக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பற்றி அவதூறு தகவல்கள் அனுப்பப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.