கோவை: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் மற்றும் மற்றொரு நபருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரது மாதிரிகள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோவை: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் மற்றும் மற்றொரு நபருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரது மாதிரிகள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொடரும் அச்சகங்களால் அனைத்து விமான நிலையங்களும் ஸ்கிரீனிங் முறையில் கொரோனோ வைரஸ் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரியவந்தது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். பின்னர் பள்ளிவாசல்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று ஈரோடு சென்றனர். இந்த நிலையில் அந்த ஏழு பேரில் ஒருவரான டான் ரோசாக் (40) என்பவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து உடனிருந்தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப கோவை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனையின் போது அவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு இவரது இரத்தம் மற்றும் சலி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல, 27 வயது மதிப்புள்ள மற்றொரு நபரும் கொரோனோ அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொடரும் அச்சகங்களால் அனைத்து விமான நிலையங்களும் ஸ்கிரீனிங் முறையில் கொரோனோ வைரஸ் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரியவந்தது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். பின்னர் பள்ளிவாசல்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று ஈரோடு சென்றனர். இந்த நிலையில் அந்த ஏழு பேரில் ஒருவரான டான் ரோசாக் (40) என்பவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து உடனிருந்தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப கோவை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனையின் போது அவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு இவரது இரத்தம் மற்றும் சலி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல, 27 வயது மதிப்புள்ள மற்றொரு நபரும் கொரோனோ அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.