கோவையில் இந்து இயக்கத்தினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக எல். முருகன் பதவியேற்றபின் முதன் முறையாக கோவைக்கு வருகைபுரிந்தார். அவருக்கு கோவை மாவட்ட பாஜக கட்சியினர் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில தினங்களாக இந்து இயக்கங்களின் மீது பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுவருவதாகவும், கோவையில் இந்து இயக்கங்களை சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். 

இந்த வன்முறை தாக்குதல் சம்பவங்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் கோவையில் அமைதி நிலவவேண்டும் எனவும் அதற்கு தீவிரவாத இயக்கங்களை முதலில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்து இயக்கங்களின் மீது வன்முறை தாக்குதல் தொடர்ந்து நடக்கின்ற நிலையில் இதனை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனையை காவல்துறையினர் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழகத்தில் பாஜக கட்சியினை வளர்க்க தொய்வின்றி பணி செய்துவருவதாக கூறிய அவர், பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது எனவும், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் முக்கியமான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...