கோவை: ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கோவை வழியாக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கடத்திவரப்பட்ட 52 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கோவை வழியாக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கடத்திவரப்பட்ட 52 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வழியாக பிற மாநிலங்களுக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் ரயில் நிலைய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் போலீசார் மேற்கொண்ட இந்த சோதனையின் போது, கடந்த இரு நாட்களில் மட்டும் 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை சேர்ந்த சிலம்பரசன் (34), தேவரத்தை சேர்ந்த பிரபாகரன் (36) மற்றும் சிங்கராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (24), ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கோவை வழியாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் சிறையில் அடைத்தனர்.
கோவை வழியாக பிற மாநிலங்களுக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் ரயில் நிலைய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் போலீசார் மேற்கொண்ட இந்த சோதனையின் போது, கடந்த இரு நாட்களில் மட்டும் 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை சேர்ந்த சிலம்பரசன் (34), தேவரத்தை சேர்ந்த பிரபாகரன் (36) மற்றும் சிங்கராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (24), ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கோவை வழியாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் சிறையில் அடைத்தனர்.