பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்வு..! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வரி மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திண்டாடி வரும் நிலையில், இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட பெரிதும் துணை புரியும்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, பேரல் ஒன்று 36 டாலராகச் சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி கடந்த 2004-ம் ஆண்டுக்கு இணையாக வந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8 வரை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.69.87க்கும், டீசல் ரூ.62.58க்கும் விற்கப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17.98, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.13.83 என உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...