கொரோனா அச்சத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் பிரிகேஜி, எல்.கேஜி மற்றும் யுகேஜி ஆகிய மழலையர் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கேரள எல்லையை ஓட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழலையர் பள்ளிகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 16 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பினை முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் பிரிகேஜி, எல்.கேஜி மற்றும் யுகேஜி ஆகிய மழலையர் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கேரள எல்லையை ஓட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழலையர் பள்ளிகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 16 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பினை முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.