அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் மாணவர்கள் மனு!

கோவை: பேரூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எம்.எஸ் என்ற தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: பேரூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எம்.எஸ் என்ற தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள் கூறும்போது, கல்லூரியில் சேரும்போது நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகவும் தற்போது, இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தாமதமாக பணம் செலுத்திய மாணவர்களிடம் இருந்து பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி அதிக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் இது குறித்த கேள்வி எழுப்பிய பதினேழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்து உள்ளதாக தெரிவித்தனர். மேலும், துறை பேராசிரியர் நடவடிக்கை எடுக்காமல் மற்றொரு துறை பேராசிரியர் கையெழுத்திட்டு உள்ளதாக குற்றம்சாட்டினர்.

இது குறித்து கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனை தொடர்ந்து பேரூர் வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் இப்பிரச்சினை குறித்து தீர்வு காணப்படும் என கூறியதை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு சென்ற மாணவர்களை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்றனர்.

மேலும், ஒரு சில மாணவர்களை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றவர்கள் வெளியில் நிறுத்தப்பட்டதாக கூறிய மாணவர்கள், தாமதமாக செலுத்தும் கல்வி கட்டணத்தை பல்கலை விதிமுறைக்கு உட்பட்டு செலுத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், நிர்வாகம் அதிக கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும், மாணவர்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...