திருப்பூர்: திருப்பூா் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் இன்று காலை திறக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூா் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் இன்று காலை திறக்கப்பட்டது.

இந்த நீதிமன்றத்தை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜெயந்தி இந்த புதிய நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.

திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருப்பூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றம், திருப்பூர் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் ஏற்கெனவே பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள் இந்த குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளது.

மேலும், வரும் காலங்களில் குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நடைபெறும் என்று பொதுமக்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் மாவட்ட நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.