கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் சோதனை சாவடிகளில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கவும் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் சோதனை சாவடிகளில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கவும் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் யானை, புலி, கரடி, மான், சிறுத்தை, காட்டு மாடு என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், சோதனை சாவடிகள் ஆழியாறு, அட்டகட்டி, டாப்சிலிப், சேத்துமடை, கவர்க்கல், சிறுகுன்றா, சின்னக்கல்லார், சோலையார் அணை, காடம்பாறை, மானாம்பள்ளி, கேரளா எல்லையான மழுக்குப் பாறை பகுதிகளில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கவும் வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி சோதனை சாவடிக்கு இரண்டு கண்காணிப்பு கேமரா விதம் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது வன சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளார்.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் யானை, புலி, கரடி, மான், சிறுத்தை, காட்டு மாடு என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், சோதனை சாவடிகள் ஆழியாறு, அட்டகட்டி, டாப்சிலிப், சேத்துமடை, கவர்க்கல், சிறுகுன்றா, சின்னக்கல்லார், சோலையார் அணை, காடம்பாறை, மானாம்பள்ளி, கேரளா எல்லையான மழுக்குப் பாறை பகுதிகளில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கவும் வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி சோதனை சாவடிக்கு இரண்டு கண்காணிப்பு கேமரா விதம் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது வன சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளார்.