கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது - மாநகர காவல் ஆணையாளர்

கோவை: கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக சில மோதல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது. 3 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு தாக்குதல் வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

மற்ற இரு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் காவல்துறை செய்துள்ளது. நேற்று இரவு 127 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, நேற்று இரவு 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இன்றும் தொடர் வாகன சோதனை நடத்தப்படும் என்றார்.

மேலும், அனைத்து அமைப்புகளும் அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும். அடுத்த ஒருவார காலத்திற்கு கோவை நகரில் போராட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இஸ்லாமியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ரமேஷ் கிருஷ்ணா போன்ற அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...