ஊதியம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

கோவை: கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊதியம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊதியம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 30க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதனால் மருத்துவமனையில் பணிபுரியும் முப்பதுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஊதியம் குறித்து கேட்டால் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல, ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்த பணியாளர்கள், தற்போது எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிலுவையில் உள்ள அரியர்ஸ் மற்றும் ஊதியத்தை வழங்க வேண்டும், கூடுதல் பணி நேர ஊதியம், வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...