திருப்பூர்: தமிழகத்தில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தமிழகத்தில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேடு திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் தொடர் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரிலும் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் செல்லாண்டியம்மன் படித்துறை அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 26-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.

இந்த நிலையில் தர்ணா போராட்டம் நடத்திவரும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மறியல் போராட்டத்தால் காமராஜர் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாநகர உதவி ஆணையர் நவீன்குமார் பேராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களை பாதிக்காத வகையில் கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என போலீஸார் தரப்பில் கேட்டுக்கொண்டதன் பேரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேடு திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் தொடர் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரிலும் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் செல்லாண்டியம்மன் படித்துறை அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 26-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.

இந்த நிலையில் தர்ணா போராட்டம் நடத்திவரும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மறியல் போராட்டத்தால் காமராஜர் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாநகர உதவி ஆணையர் நவீன்குமார் பேராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களை பாதிக்காத வகையில் கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என போலீஸார் தரப்பில் கேட்டுக்கொண்டதன் பேரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.