கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் யாரும் பாதிப்படையவில்லை எனவும் விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருவதாக, ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் யாரும் பாதிப்படையவில்லை எனவும் விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருவதாக, ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தல் ஏற்படும் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்படி கோவை மாவட்டத்தில் எடுத்து வரப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் கொரோனாவினால் பயம்படும் படியாக எந்த நிகழ்வும் ஏற்படவில்லை, என கூறினார்.
மேலும், கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்திவருவதாகவும், கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை விமான நிலையம், அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தனியாக மருத்துவ. பரிசோதனை செய்துள்ளோம். இதுவரை, கோவையில் 100 சதவீத விழுக்காடு பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் சளி, காய்ச்சலுடன் வருபவர்களை தனியார் மருத்துவமனைகள் கவனமாக அணுக வேண்டும் எனவும் கொரோனா அறிகுறியோடு தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் குறித்த தகவலை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.