கோவை: கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறை இயக்குனர் திரிபாதி தலைமையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறை இயக்குனர் திரிபாதி தலைமையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவையில் இந்து முன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டது, இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் தாக்கப்பட்டது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் கோவை மாவட்டம் பதட்டமான சூழலில் உள்ளது.
இந்த நிலையில், தொடரும் பிரச்சனைகளால் அசாதாரண சூழல் நிலவி விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று விமானம் மூலம் கோவை வந்த காவல் துறை இயக்குனர் திரிபாதி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக செயல்பட்டு வந்த வெற்றிச்செல்வன் தற்போது தற்காலிகமாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக இருந்த சந்திரசேகர் சிறப்பு நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோவையில் இந்து முன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டது, இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் தாக்கப்பட்டது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் கோவை மாவட்டம் பதட்டமான சூழலில் உள்ளது.
இந்த நிலையில், தொடரும் பிரச்சனைகளால் அசாதாரண சூழல் நிலவி விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று விமானம் மூலம் கோவை வந்த காவல் துறை இயக்குனர் திரிபாதி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக செயல்பட்டு வந்த வெற்றிச்செல்வன் தற்போது தற்காலிகமாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக இருந்த சந்திரசேகர் சிறப்பு நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.