கோவை: வால்பாறை அடுத்த தோனிமுடி எஸ்டேட்டில் காட்டுயானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு ரூ 4 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கோவை: வால்பாறை அடுத்த தோனிமுடி எஸ்டேட்டில் காட்டுயானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு ரூ 4 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தோனிமுடி எஸ்டேட்டில் கடந்த ஜனவரி மாதம் தேயிலைத் தோட்ட தொழிலாளி சுரேஷ்(22) வேலை முடிந்து வீடு திரும்பும் போது காட்டுயானை தாக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, அன்றைய தினம் ஈம காரியங்கள் செய்வதற்காக ரூ 50 ஆயிரம் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு ரூ 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சுரேஷின் குடும்பத்தினரிடம் நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, மீதமுள்ள ரூ 3.5 லட்சத்திற்கான காசோலையை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், வனச்சரகர்கள் காசிலிங்கம், நவீன் மற்றும் இறந்த சுரேஷ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தோனிமுடி எஸ்டேட்டில் கடந்த ஜனவரி மாதம் தேயிலைத் தோட்ட தொழிலாளி சுரேஷ்(22) வேலை முடிந்து வீடு திரும்பும் போது காட்டுயானை தாக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, அன்றைய தினம் ஈம காரியங்கள் செய்வதற்காக ரூ 50 ஆயிரம் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு ரூ 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சுரேஷின் குடும்பத்தினரிடம் நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, மீதமுள்ள ரூ 3.5 லட்சத்திற்கான காசோலையை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், வனச்சரகர்கள் காசிலிங்கம், நவீன் மற்றும் இறந்த சுரேஷ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.