தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி அருகே கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் கைது

கோவை: தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவலால் கியூ பிரிவு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பு பணி மற்றும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எல்லைப் பகுதிகளில் இருந்து நகர்புறங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக வெளியான ரகசிய தகவலின் பேரில் போலீசார் தணிக்கைச்சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் கேரளாவில் இருந்து ஆனைக்கட்டி வழியாக கோவை வரும் அரசு பேருந்தை ஆனைக்கட்டி வனத்துறை தணிக்கைச்சாவடியில் கியூ பிரிவு போலீசார் திடீரென தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பேருந்துக்குள் இருந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை மடக்கிப் பிடித்த போலீசார் அவரை கைது செய்து மறைமுக இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட இந்த பெண் மாவோயிஸ்ட் மீது கர்நாடக மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.



மேலும், இவர் எந்த குழுவைச் சேர்ந்தவர், இவர் மீது எந்தெந்த மாநிலத்தில் வழக்குகள் உள்ளது, அதேபோல, யாரை சந்திப்பதற்காக சென்று கொண்டிருக்கிறார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...