நீலகிரி: கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி: கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது.
கேரளாவில் புதிதாக 9 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 4 பேருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருக்கும் என எச்சரிக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது.
கேரளாவில் புதிதாக 9 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 4 பேருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருக்கும் என எச்சரிக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.