நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சத்தால்,கேரளாவிலிருந்து முக கவசத்துடன் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சத்தால்,கேரளாவிலிருந்து முக கவசத்துடன் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காேடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற மாஜிஸ்டிரேட் வடமலை முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையில் போது 6 சாட்சிகளுக்கான குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதில் 4 சாட்சிகளிடம் இன்று கொள்ளை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் விசாரணையின் போது கேட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், கேரளாவில் இருந்து வந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாப்பு கருதி முக கவசத்துடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காேடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற மாஜிஸ்டிரேட் வடமலை முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையில் போது 6 சாட்சிகளுக்கான குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதில் 4 சாட்சிகளிடம் இன்று கொள்ளை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் விசாரணையின் போது கேட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், கேரளாவில் இருந்து வந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாப்பு கருதி முக கவசத்துடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.