கோவை: வால்பாறையில் பழமைவாய்ந்த அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் அன்னை காமாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவை: வால்பாறையில் பழமைவாய்ந்த அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் அன்னை காமாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பழமைவாய்ந்த காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 52வது ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நவகிரஹ ஹோம பூஜையுடன் அம்மனுக்கு தீர்த்த அபிக்ஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக மேளதாள வாத்தியங்கள் முழங்க வால்பாறை ஸ்ரீ முருகன் கோவிலிருந்து கல்யாண சீர் வரிசை ஊர்வலமாக காமாட்சியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

தென்சங்கம் பாளையம் சிவபால சிவாச்சாரியார் குழுவினர் அக்னி குன்டம் வளர்த்து ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரருக்கும் அன்னை காமாட்சிக்கும் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தீபாராதணை நடைபெற்றது. மதியம் அறுஞ்சுவை அன்னதானம் நடைபெற்றது. மாலை கோலாட்டம் கும்மி, ஜன்டை மேளம், சிங்காரிமேளம், தேவராட்டத்துடன் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலிருந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச்சென்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பழமைவாய்ந்த காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 52வது ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நவகிரஹ ஹோம பூஜையுடன் அம்மனுக்கு தீர்த்த அபிக்ஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக மேளதாள வாத்தியங்கள் முழங்க வால்பாறை ஸ்ரீ முருகன் கோவிலிருந்து கல்யாண சீர் வரிசை ஊர்வலமாக காமாட்சியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

தென்சங்கம் பாளையம் சிவபால சிவாச்சாரியார் குழுவினர் அக்னி குன்டம் வளர்த்து ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரருக்கும் அன்னை காமாட்சிக்கும் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தீபாராதணை நடைபெற்றது. மதியம் அறுஞ்சுவை அன்னதானம் நடைபெற்றது. மாலை கோலாட்டம் கும்மி, ஜன்டை மேளம், சிங்காரிமேளம், தேவராட்டத்துடன் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலிருந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச்சென்றனர்.