இத்தாலியிலிருந்து கேரளா வந்த 3 வயது குழந்தைக்‍கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

கேரளா: இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3-வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா: இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3-வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், இத்தாலியிலிருந்து 3-வயதுக் குழந்தையுடன் வந்த தம்பதியினர் கேரள விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பின்னர், குழந்தை உள்பட மூவரும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைக்கப்பட்டுக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்தநிலையில், அந்தக்குழந்தைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இந்தியாவில் 42 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 233 பேர் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...