கோவை: கோவை புலியகுளம் தாமு நகர் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையத்தின் தெற்கு தொகுதி மகளிர் அணியினர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கோவை: கோவை புலியகுளம் தாமு நகர் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையத்தின் தெற்கு தொகுதி மகளிர் அணியினர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல, நேற்று விடுமுறை நாள் என்பதால் அதற்கு முன் தினமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகள், ஆடல் பாடல்கள் மற்றும் கருத்தரங்கங்கள் என நடைபெற்றது.

இந்த நிலையில், கோவையில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மையத்தின் தெற்கு தொகுதி மகளிர் அணியினர் புலியகுளம் அருகே உள்ள தாமு நகர் அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.அத்துடன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தாய்மையைப் போற்ற வேண்டும் என்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், மகளிரணி நிர்வாகிகளான சாந்தி,நாகஜோதி, சங்கீதா, உமா மகேஸ்வரி, சாந்தி, சுவிதா ஆகியோரும் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல, நேற்று விடுமுறை நாள் என்பதால் அதற்கு முன் தினமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகள், ஆடல் பாடல்கள் மற்றும் கருத்தரங்கங்கள் என நடைபெற்றது.

இந்த நிலையில், கோவையில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மையத்தின் தெற்கு தொகுதி மகளிர் அணியினர் புலியகுளம் அருகே உள்ள தாமு நகர் அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.அத்துடன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தாய்மையைப் போற்ற வேண்டும் என்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், மகளிரணி நிர்வாகிகளான சாந்தி,நாகஜோதி, சங்கீதா, உமா மகேஸ்வரி, சாந்தி, சுவிதா ஆகியோரும் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.