திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பினர் குவிந்ததால் பதட்டம்; போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்

திருப்பூர்: திருப்பூர் அருகே குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பினர் குவிந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிய நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் சுமூகமாக கலைந்து சென்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பினர் குவிந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிய நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் சுமூகமாக கலைந்து சென்றனர்.



திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால்ரோடு பகுதியில் இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு 5000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதே மங்கலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.



குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பொதுக்கூட்டம் முடிந்ததும் இஸ்லாமியர்கள் தர்ணா மேற்கொண்டு வரும் சாலை வழியாக இந்து அமைப்பினர் செல்ல உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து ஏராளமான இஸ்லாமியர்கள் மங்கலம் திருப்பூர் சாலையை அடைத்தவாறு குவிய துவங்கினர். இந்து அமைப்பினரும் தாங்கள் திருப்பூர் செல்லும் சாலையில் இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர் என அப்பகுதி வழியாக செல்ல வேண்டும் எனவும் எதிர்புறமாக திரண்டர். இதன் காரணமாக இரு தரப்பினரும் செல்வதற்கான வழியில் பிரச்சினை எழுந்தது. தொடர்ந்து இரு தரப்பினரும் அதிக அளவில் கூடியதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.



இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேற்கொண்டு யாரும் உள்ளே வரமுடியாத வகையில் சாலைகள் அடைக்கப்பட்டு இரு தரப்பினரிடையே போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக மங்கலம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. போலீசாரின் துரித நடவடிக்கை காரணமாக பதட்டமான சூழல் தணிந்து அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...