திருப்பூர்: கொரோனா வைரஸ்க்கு பிராய்லர் கோழிதான் காரணம் என தவறான வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், எந்தவித பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை மூலம் நீரூபிக்கப்பட்டுள்ளதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: கொரோனா வைரஸ்க்கு பிராய்லர் கோழிதான் காரணம் என தவறான வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், எந்தவித பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை மூலம் நீரூபிக்கப்பட்டுள்ளதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல்வர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன் 14.80 ஏக்கர் பரப்பளவில் சுமார் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.என தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் தொடங்கி வைத்ததையடுத்து தற்போது விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோணா வைரசுக்கு கறிக்கோழி காரணம் எனத் தவறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் , ஆனால் எந்தவித அச்சுறுத்தலும்அதில் இல்லை என்பதை சுகாதாரத்துறை மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல்வர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன் 14.80 ஏக்கர் பரப்பளவில் சுமார் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.என தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் தொடங்கி வைத்ததையடுத்து தற்போது விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோணா வைரசுக்கு கறிக்கோழி காரணம் எனத் தவறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் , ஆனால் எந்தவித அச்சுறுத்தலும்அதில் இல்லை என்பதை சுகாதாரத்துறை மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.