உலக மகளிர் தினம்: பா.ஜ.க சார்பில் 150 பெண் குழந்தைகளுக்கு இலவச அஞ்சல் கணக்கு துவக்கம்

கோவை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 150 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கினை ராம் நகர் பகுதியில் உள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளரும் மக்கள் சேவை மைய நிறுவனருமான வானதி சீனிவாசன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 150 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கினை ராம் நகர் பகுதியில் உள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளரும் மக்கள் சேவை மைய நிறுவனருமான வானதி சீனிவாசன் இன்று துவக்கி வைத்தார்.



பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்புக் கணக்கு' (சுகன்யா சம்ரிதி யோஜனா) திட்டத்தை 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பத்து வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கைத் துவக்கி வீட்டுக்கு அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகத்திலோ அல்லது குறிப்பிட்ட வங்கிக் கிளைகளிலோ சேமிப்புக் கணக்கை துவங்கலாம்.

செல்வமகள் சேமிப்பு கணக்கை துவங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரிச் சான்றிதழ்,அடையாளச் சான்றிதழ் போன்றவை இதில் அவசியம். சேமிப்புக் கணக்கைத் தொடங்க, குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக்கணக்கு தொடங்கலாம்.

15 ஆண்டுக்கு பணம் செலுத்தபட்ட பின்னர் பெண் குழந்தையின் 21-வது வயதில் முதிர்வுத் தொகையைப் பெற்று கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. 18 வயது நிரம்பியவுடன் உயர்கல்விக்காக 50 சதவிகிதப பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8.1 சதவிகித வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.



செல்வமகள் சேமிப்பு கணக்கை துவக்கி வைத்த பின்னர் மக்கள் சேவை மைய நிறுவனர் வானதி சீனிவாசன் கூறுகையில்: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் முதல் இடம் வசிப்பதாகவும் தொண்டாமுத்தூர் முள்ளியம்பாளையம் கிராமம் தத்தெடுக்கபட்டு அங்கு 100 பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

கோவை தபால்துறை முதன்மை கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாக்ரே கூறுகையில்: இந்த திட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 5000 மேற்பட்டோர் பேர் சேர்ந்ததாகவும் இந்த ஆண்டு இதுவரை 6500 பேருக்கு மேல் சேர்ந்து உள்ளனர் என தெரிவித்தார்.வருட இறுதிக்குள் 10000 பேர் வரை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது எனவும் 100% பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வித்ய விகாஷினி பள்ளி நிறுவனர் விசாலாட்சி ராஜகோபாலன் பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...