கோவை: தலித் சமுதாய மக்களையும், பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டந்தோறும் திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: தலித் சமுதாய மக்களையும், பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டந்தோறும் திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 14ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக பதவி வகிக்க திமுக.தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும், ஊடகங்கள் குறித்து வெறுக்கத்தக்க விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்.எஸ்.பாரதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ஆர்.எஸ்.பாரதியின் உருவப்படத்தை கிழித்தெறிந்து கண்டனங்களை தெரிவித்தனர்.

திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 14ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக பதவி வகிக்க திமுக.தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும், ஊடகங்கள் குறித்து வெறுக்கத்தக்க விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்.எஸ்.பாரதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ஆர்.எஸ்.பாரதியின் உருவப்படத்தை கிழித்தெறிந்து கண்டனங்களை தெரிவித்தனர்.